தென்னிந்தியாவின் புகழ்பெற்ற இருட்டுக்கடை அல்வா உரிமையாளர் தற்கொலை!

இருட்டுகடை அல்வா உரிமையாளர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. தமிழகத்தில் தென்னிந்தியா முழுவதும் இருட்டுக்கடை அல்வா புகழ் பெற்றது. இந்த நிலையில் சமீபத்தில் இருட்டுக்கடை அல்வா அதிபர் ஹரி ஹரிசிங் அவர்களுக்கு திடீரென கொரோனா உறுதியான தகவல்கள் வெளிவந்தது. இந்த நிலையில், புகழ்பெற்ற திருநெல்வேலி இருட்டுக்கடை அல்வா கடை அதிபர் தற்கொலை செய்து கொண்டிருப்பதாக வெளிவந்துள்ள தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இது குறித்த முதல் கட்ட போலீசார் விசாரணையில் இருட்டுக்கடை அல்வா கடை அதிபர் ஹரிசிங் அவர்களுக்கு சமீபத்தில் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் இதனையடுத்து அவர் தற்கொலை என்ற விபரீத முடிவை எடுத்துள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது. மேலும், கொரோனாவால் ஏற்பட்ட பயம் காரணமாக அவர் இந்த முடிவை எடுத்துள்ளதாக தெரிகிறது. இருட்டுக்கடை அல்வா ஹரி சிங் தற்கொலை நெல்லை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!