நல்லூரில் கைவரிசை காட்டிய திருடர்கள்!

நல்லூர் கந்தசுவாமி கோவில் தேர்த் திருவிழா நேற்று நடைபெற்ற நிலையில், ஆலயத்துக்கு வந்த பக்தர்களின் நகைகள் அபகரிக்கப்பட்ட 8 சம்பவங்கள் இதுவரை பதிவாகியுள்ளதாக, யாழ்ப்பாணம் பொலிஸார் தெரிவித்தனர்.

7 தங்கச்சங்கிலிகள், 1 தாலிக்கொடி உட்பட எட்டு பக்தர்களின் நகைகள் அபகரிக்கப்பட்டுள்ளன. இது தொடர்பில் நகையைப் பறிகொடுத்தவர்கள் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.

அதேவேளை, நல்லூர் கோவில் வளாகத்தில் சந்தேகத்துக்கிடமான முறையில் நடமாடிய வெளிமாவட்டத்தைச் சேர்ந்த 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் இவர்கள், திருகோணமலை, மட்டக்களப்பு, கல்லடி, செங்கலடி பகுதியைச் சேர்ந்தவர்களெனவும், பொலிஸார் கூறினர்.

அதேவேளை, கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து தாலிக்கொடியொன்றும், 6 தங்கச்சங்கிலிகளும் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!