தொண்டைமானாறு விபத்தில் குடும்பஸ்தர் பலி!- இருவர் காயம்.

யாழ்ப்பாணம் – தொண்டைமானாறு , கெருடாவில் பகுதியில் நேற்று மாலை 6.15 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்தார். சைக்கிளில் சென்று கொண்டிருந்த குடும்பஸ்தரை, அதிவேகமாக வந்த மோட்டார் சைக்கிள் ஒன்று மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. இதில் சைக்கிளில் சென்றவர் அந்த இடத்திலேயே உயிரிழந்தார். மோட்டார் சைக்கிளில் சென்ற இரு இளைஞர்களும் பலத்த காயங்களுடன் மந்திகை மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!