மாகாணசபைத் தேர்தலில் நிச்சயம் போட்டி!

மாகாணசபைத் தேர்தலில் நிச்சயம் போட்டியிடுவேன் என்று மலையக மக்கள் முன்னணியின் ஸ்தாபகத் தலைவரான சந்திரசேகரனின் புதல்வி சட்டத்தரணி அனுஷியா சந்திரசேகரன் தெரிவித்துள்ளார்.

இணையவழி கலந்துரையாடலின்போது எழுப்பப்பட்ட கேள்வியொன்றுக்கு பதிலளிக்கையிலேயே அவர் மேற்படி தகவலை வெளியிட்டார்.

அத்துடன் தனித்து போட்டியிடுவதா அல்லது கூட்டணி அமைத்து போட்டியிடுவதா என்பது தொடர்பி ல் அப்போதைய அரசியல் கள நிலவரத்தை அடிப்படையாகக்கொண்டே முடிவெடுக்கப்படும் எனவும் அனுஷியா சந்திரசேகரன் கூறினார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!