மாலுமிகளிடம் வாக்குமூலம் பெற உத்தரவு!

இலங்கைக் கடலில் தீவிபத்து ஏற்பட்டு எண்ணெய்க் கசிவை ஏற்படுத்திய எம்ரி. நியூ டைமன்ட் கப்பலின் கப்டன் உள்ளிட்ட 23 மாலுமிகளிடமும், வாக்குமூலங்களைப் பதிவு செய்யுமாறு, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்துக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கொழும்பு பிரதம நீதிவான் லங்கா ஜயரத்ன நேற்று இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.

அத்துடன், எண்ணெய் கப்பலின் தாங்கிகளில் உள்ள மசகு எண்ணெயின் மாதிரிகளை எடுத்து ஆய்வு செய்யுமாறும், கப்பலின் தரவுப் பதிவேடுகளின் பிரதிகளை ஆய்வுக்கு உட்படுத்துமாறும் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்துக்கு கொழும்பு பிரதம நீதிவான் பணித்துள்ளார்.

கப்பலின் கப்டன் உள்ளிட்ட மாலுமிகள் தற்போது காலிக்கு கொண்டு வரப்பட்டு தனிமைப்படுத்தி வைக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!