வேலை எதுவும் செய்யால் ஓய்வாக படுத்துறங்கி பொழுது போக்கிக் கொண்டிருப்பவர்களை பலரும் திட்டித் தீர்ப்பர். ஆனால், இப்படியானவர்களை நாசா வேலைக்கு அழைக்கிறது.
நாள் முழுவதும் கட்டிலில் படுத்துக்கொண்டிருப்பதுதான் இவர்கள் செய்ய வேண்டிய வேலை. நாசாவின் தலைமையகத்தில் 70 நாட்கள் இவ்வாறு படுத்துக்கொண்டிருக்க வேண்டுமாம். இதற்காக மாதாந்தம் சுமார் 6 இலட்சம் ரூபா ஊதியம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மனித உடல்களில் நுண்ஈர்ப்புவிசையின் தாக்கம் குறித்த ஆய்வுக்காக இந்த ஆட்சேர்ப்பு நடைபெறுகிறது.
தெரிவுசெய்யப்படும் விண்ணப்பதாரிகள் தினமும் 24 மணித்தியாலங்களும் சாய்வான கட்டிலில் படுத்துக்கொண்டிருக்க வேண்டும்.
இதன்போது அவர்கள் தொலைக்காட்சி, இணையத்தளங்களை பார்க்கவோ, வீடியோ கேம்ஸ் விளையாடவோ முடியும் என நாசா தெரிவித்துள்ளது.
இந்த ஆய்வு முடிந்தவுடன் இதில் பங்குபற்றியவர்களுக்கு இருவார புனர்வாழ்வு முகாமொன்றும் நடத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
















