19 வயது இளைஞனை கொன்று ஏரிக்கரையில் புதைத்த கொடூரம்: வெளியான அதிர்ச்சி காரணம்!

மனைவியுடன் தகாத உறவில் இருந்த 19 வயது இளைஞனை அடித்து கொலை செய்து ஏரிக்கரையில் புதைத்துவிட்டு கணவர் போலீசாரிடம் சரணடைந்த சம்பவம் பரபரபப்பை ஏற்படுத்தியுள்ளது. பெரிய காஞ்சிபுரம், ஜவகர்லால் தெருவை சேர்ந்த கார் ஓட்டுநனர் ரவிச்சந்திரன் காரை கிராமத்தை சேர்ந்த காமாட்சி என்பவரை திருமணம் செய்துகொண்டு, தற்போது இரண்டு மகன்களுடன் வசித்து வந்துள்ளார்.

டிரைவர் ரவிசந்திரனின் மனைவி காமாட்சி அதே பகுதியை சேர்ந்த தினேஷ் என்ற இளைஞருடன் தகாத உறவில் இருந்து வந்துள்ளார். இது தெரிந்து ரவிச்சந்திரன் இருவரையும் கண்டித்துள்ளார். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு தினேஷும் காமாட்சியும் வெளியே சென்றுவிட்டு வீடு திரும்பியுள்ளனர். இதனால் ரவிச்சந்திரனுக்கும் தினேஷிற்க்கும் இடையே வாக்குவாதம் நடந்துள்ளது. இதனால் ஆத்திரம் அடைந்த ரவிச்சந்திரன் தினேஷின் தலையில் கட்டையால் அடித்துள்ளார்.

இதனால் தினேஷ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். உடனடியாக ரவிச்சந்திரன் ஜேசிபி எந்திரத்தில் தினேஷ் உடலை எடுத்து கொண்டு சிறுவாக்கம் ஏரிக்கரையில் 10 அடி பள்ளம் தோண்டி புதைத்துள்ளார். கொலை செய்த ரவிச்சந்திரன் நேற்று மதியம் காஞ்சிபுரம் தாலுகா காவல் நிலையத்தில் தானாகவே சரணடைந்துள்ளார்.

காஞ்சிபுரம் தாலுகா காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து, புதைக்கப்பட்ட தினேஷின் உடலை தோண்டி எடுத்து அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தது. மனைவியின் கள்ளக்காதலனை கொலை செய்து 10 அடி பள்ளம் தோண்டி புதைத்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!