தனிமை மையத்துக்கு சென்ற பஸ் பளையில் விபத்து; 17 பேர் காயம்!

ஓமானில் இருந்து நாடு திரும்பியவர்களை யாழ்ப்பாணம் – விடத்தற்பளை தனிமை மையத்திற்கு ஏற்றிவந்த சொகுசு பஸ் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து கிளிநொச்சி – பளையில் ஆனைவிழுந்தான் அருகே விபத்துக்குள்ளாகியுள்ளது.

இன்று (27) காலை இடம்பெற்ற இந்த விபத்தில் பஸ் கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி நீர் விநியோக குழாய் மீது மோதியுள்ளது.

சம்பவத்தில் 17 காயமடைந்துள்ளதுடன், படுகாயமடைந்த 3 பேர் உடனடியாக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!