சுட்டுக்கொல்லப்பட்ட 9 கைதிகளுக்கு கொரோனா இருந்தது உறுதி!

மஹர சிறைக்கலவரத்தில் சுட்டுக் கொல்லப்பட்ட 11 கைதிகளில் 9 கைதிகளுக்கு கொரோனா தொற்று இருந்தமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதன்படி கொரோனா வைரஸ் தொற்று காணப்பட்ட 12 பேர் இதுவரை தற்கொலை, விபத்து மற்றும் துப்பாக்கி சூடு காரணமாக மரணமடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இவர்களில் 10 பேர் கொரோனா வைரஸ் தொற்று அச்சம் காரணமாக சிறைகளில் இருந்து தப்பிக்க முயன்ற போது மோதலில் சுட்டுக் கொல்லப்பட்டவர்கள் என்பது சுட்டிக்காட்டத்தக்கது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!