கல்வி அமைச்சர் விடுத்துள்ள விசேட அறிவிப்பு…!

நாட்டில் கொரோனா தொற்று இரண்டாம் அலை ஏற்பட்டமை காரணமாக மூடப்பட்டிருந்த அனைத்து பிரத்தியேக வகுப்புக்களும் எதிர்வரும் 25 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.

சுகாதார விதிமுறைகளுக்கமைய பிரத்தியேக வகுப்புக்களை மீள ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

நாடாளுமன்றில் இன்று உரையாற்றுகையில் கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ எல் பீரிஸ் இதனை தெரிவித்துள்ளார்.

இதேவேளை மேல் மாகாணம் மற்றும் தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசங்கள் தவிர்ந்த நாட்டின் ஏனைய பகுதிகளில் உள்ள அறநெறி பாடசாலைகளை மீள ஆரம்பிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, எதிர்வரும் 17 ஆம் திகதி முதல் இந்து, பௌத்த, கத்தோலிக்க மற்றும் இஸ்லாமிய அறநெறி பாடசாலைகளும் சுகாதார விதிமுறைகளுக்கமைய மீள ஆரம்பிக்கப்படவுள்ளதாக புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சு தெரிவித்துள்ளது.

இதன்படி, கொரோனா தொற்றுப் பரவல் காரணமாக மூடப்பட்டிருந்த மேல் மாகாணம் மற்றும் தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசங்கள் தவிர்ந்த நாட்டின் ஏனைய பிரதேசங்களில் உள்ள அனைத்து அறநெறி பாடசாலைகளும் எதிர்வரும் 17 ஆம் திகதி முதல் ஞாயிற்றுக்கிழமைகளில் நடாத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

சுகாதார வழிமுறைகளுக்கு அமைய அனைத்து அறநெறி பாடசாலைகளையும் திறப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!