யாழ்ப்பாண சோதனையில் 15 பேருக்கு தொற்று!

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை ஆய்வு கூடத்தில் நேற்று மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் 15 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாக வைத்தியசாலை பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.

இதன்படி யாழ்ப்பாணத்தில் ஒருவர், மன்னாரில் இருவர், வெள்ளாங்குளம் தனிமைப்படுத்தல் மையத்தில் 10 பேர், ஜம்பகோளப்பட்டினம் தனிமைப்படுத்தல் மையத்தில் ஒருவர், கோப்பாய் சிகிச்சை நிலையத்தில் ஒருவர் என 15 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!