குழந்தையை துன்புறுத்திய தாயை மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்த உத்தரவு!

யாழ்ப்பாணம் – மணியந்தோட்டத்தில் 8 மாத குழந்தையை அடித்து துன்புறுத்திய தாயை சட்ட மருத்துவ அதிகாரி முன்னிலையில் முற்படுத்தி மனநிலை மற்றும் பிற மருத்துவ பரிசோதனை அறிக்கையை சமர்ப்பிக்குமாறு யாழ்ப்பாணம் மேலதிக நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.

அத்துடன், குழந்தையின் உடல்நிலை தொடர்பில் சட்ட மருத்துவ அதிகாரியின் அறிக்கையைப் பெறுவதற்கு வசதியாக இருவரையும் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்குமாறும் யாழ்ப்பாணம் மேலதிக நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!