கொரோனாவினால் 4 பேர் பலி – ஒருவர் உடுவில் மூதாட்டி!

கொரோனா தொற்று காரணமாக மேலும் நால்வர் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. யாழ்ப்பாணம் உடுவில் பகுதியைச் சேரந்த 81 வயது பெண் ஒருவரும், வாகரை பகுதியைச் சேர்ந்த 76 வயது ஆண் ஒருவரும் அவர்களில் அடங்கியுள்ளனர்.

அக்குரணைப் பகுதியைச் சேர்ந்த 57 வயது ஆண் மற்றும் ராகமையைச் சேர்ந்த 62 வயதான ஒருவர் ஆகிய நான்கு பேரே இவ்வாறு உயிரிழந்துள்ளதுள்ளனர் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நாட்டில் கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 511 ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!