வடக்கில் தொடர்ந்தும் அதிகரித்து வரும் கொரோனா தொற்று..!

வடமாகாணத்தில் மேலும் 29 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

யாழ். போதனா வைத்தியசாலை மற்றும் யாழ்ப்பபாணம் பல்கலைக்கழக மருத்துவ பீடம் ஆய்வுகூடங்களில் 634 பேருக்கு முன்னெடுக்க்பட்ட பரிசோதனைகளில் இவ்வாறு 29 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

மேலும், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் இரண்டு வைத்தியர்கள், மூன்று தாதியர்கள் உள்ளிட்ட 19 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான மேலதிக தகல்களை யாழ் போதனா வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர், வைத்தியர் யமுனானந்தா ஊடகங்களுக்கு தெரிவித்திருந்தார்.

இதேவேளை, நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளான மேலும், 272 பேர் நேற்றைய நாளில் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதன்படி, கொரோனா தொற்றின் இரண்டாம் அலையில் பாதிக்கபட்டவர்களின் எண்ணிக்கை 86 ஆயிரத்து 951 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 88 ஆயிரத்து 145 ஆக காணப்படுகின்றது.

மேலும், கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 558 ஆக அதிகரித்துள்ளது.

தொற்றுக்குள்ளான மதுகம பகுதியை சேர்ந்த 70 வயதுடைய ஒருவர் நேற்று உயிரிழந்த நிலையிலேயே இந்த அதிகரிப்பு ஏற்ப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!