தங்கையை உயிருக்கு உயிராக காதலித்த அண்ணன்: – மரணத்தில் சிக்கிய உருக்கமான கடிதம்

திருச்சி மாவட்டத்தில் அண்ணன் தங்கை காதல் காரணத்தால் குடும்பத்தில் எதிர்ப்பு தெரிவித்ததையடுத்து காதல் ஜோடிகள் தற்கொலை செய்துகொண்டனர். 17 வயது சிறுவனுக்கு, 15 வயது சிறுமியின் மீது காதல் ஏற்பட்டுள்ளது. இவர்களது காதலை இரு வீட்டாரின் பெற்றோர் எதிர்த்தனர். மேலும் 2 பேரையும் கண்டித்தனர். தூரத்து சொந்தத்தில் இருவரும் அண்ணன்-தங்கை உறவு முறை வரும். அதனால் காதலை கைவிடும்படி அறிவுரை கூறினர்.

இந்த நிலையில் நேற்று காலை 2 பேரும் பள்ளிக்கு சென்ற பின் மாலையில் பஸ்சில் அல்லூர் மேற்கு தெரு பஸ் நிறுத்தம் அருகே வந்து இறங்கினர். பின்னர் 2 பேரும் கடியாக்குறிச்சி அருகில் உள்ள ரெயில்வே தண்டவாள பாதை அருகே சிமெண்டு கட்டையில் புத்தக பையை வைத்து விட்டு பேசி உள்ளனர்.

காதலுக்கு கடுமையான எதிர்ப்பு கிளம்பியதால் தற்கொலை செய்யும் முடிவை அவர்கள் எடுத்தனர். வாழ்வில் தான் இணைய முடியவில்லை, ஒன்றாக இணைந்து சாவோம் என்ற முடிவில் தற்கொலை செய்துகொண்டனர். இவர்களது பையில் உருக்கமான கடிதம் ஒன்று இருந்தது. அதில் நாங்கள் 2 பேரும் தீவிரமாக காதலித்து வந்தோம். அண்ணன்-தங்கை உறவு முறை எனக்கூறி எங்களது காதலுக்கு எதிர்ப்பு வருகிறது.

சேர்ந்து தான் வாழ முடியவில்லை. அதனால் தற்கொலை செய்து கொள்கிறோம். எங்களது முகத்தை யாரும் பார்க்க வேண்டாம்” என்று எழுதி அதில் 2 பேரும் கையெழுத்திட்டிருந்ததாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!