சிங்கமும், சிறுத்தையும் சினிமாவில் மட்டுமின்றி, விளம்பரப் படங்களிலும் நடித்து வருகின்றனர். இதன்மூலம் பல லட்சங்களை அவர்கள் சம்பாதிப்பது ஊரறிந்த விஷயம்.
என்னதான் லட்சங்கள், கோடிகளில் சம்பாதித்தாலும், கல்யாணமாகி குழந்தை, குட்டி என்று செட்டிலான பிறகு, அவரவர் சம்பாத்யங்களை அவர்களே வைத்துக்கொள்வது தானே நல்லது.
அப்படித்தான் சிங்கமும், சிறுத்தையும் தாங்கள் நடிக்கும் படங்களில் வரும் வருமானத்தை தனித்தனியாக வைத்துக் கொள்கிறார்களாம்.
சரி, பெற்றவர்களுக்கு? தாங்கள் நடிக்கும் விளம்பரப் படங்களில் கிடைக்கும் பணத்தை அப்பா, அம்மாவுக்கு கொடுத்துவிடுகிறார்களாம்.
















