தீவிர மருத்துவ கண்காணிப்பில் துணைவேந்தர்!

யாழ்ப்பாணம் பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் சி.சிறிசற்குணராஜா, நேற்றுமுன்தினம் ஏற்பட்ட இருதய அடைப்புக் காரணமாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை இருதய சத்திரசிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளார்.

அவருக்கு ஏற்பட்ட இந்த திடீர் மாரடைப்புத் தொடர்பில் இருதய குருதிக் குழாய் மருத்துவ சோதனைகள் முன்னெடுக்கப்படுகின்றன. இந்தப் பரிசோதனையின் பின்பே இருதய சத்திரச்சிகிச்சை அல்லது உறைகுழாய் (Stent) வைப்பது தொடர்பில் முடிவு எடுக்கப்படும் என்று மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

நீரிழிவு நோய் கட்டுப்பாட்டை கவனிக்காமல் அவர் விட்டதனால் இந்த நிலை ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

பேராசிரியர் சி.சிறிசற்குணராஜாவின் மருத்துவ சோதனைகள் மற்றும் உடன் சிகிச்சைகளை இருதய சத்திரசிகிச்சை நிபுணர்களான லக்ஸ்மன், குருபரன் இணைந்து கண்காணித்து வருகின்றனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!