சிங்கள-பௌத்த மேலாதிக்கத்தை பரப்புகிறது பொது பலசேனா!

இலங்கையில் சிங்கள பௌத்த மேலாதிக்கத்தை தொடர்ந்தும் பரப்பும் செயற்பாட்டில் பொதுபலசேனா அமைப்பு ஈடுபடுவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. சர்வதேச மத சுதந்திரம் தொடர்பான தனது வருடாந்த அறிக்கையிலேயே அமெரிக்கா இந்த விடயத்தை தெரிவித்துள்ளது.

இலங்கையில் சிறுபான்மை மதங்களை இலக்குவைத்து முன்னெடுக்கப்படும் சமூக ஊடக பிரசாரங்கள் குரோதத்தை உருவாக்கியுள்ளன என சிவில் சமூக அமைப்புகள் தெரிவித்துள்ளன என அமெரிக்கா தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

பொதுபல சேனா போன்ற சிங்கள தேசியவாத குழுக்கள் சிங்கள பௌத்த மேலாதிக்கவாதத்தை தொடர்ந்து பிரசாரம் செய்கின்றன என தெரிவித்துள்ள அமெரிக்கா சிஙகள தேசியவாத குழுக்கள் மத மற்றும் சிறுபான்மையினத்தவர்களை சமூக ஊடகங்களில் இழிவுபடுத்துகின்றன எனவும் குறிப்பிட்டுள்ளது.

முஸ்லிம் தமிழ் சமூகத்திற்கு எதிராக குரோதங்களை தூண்டுபவர்களுக்கு எதிராக அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பதில்லை எனவும் அமெரிக்கா தெரிவித்துள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!