எவள் அன்பாகப் பேசுகிறாளோ அவளே மனைவி.
எவனிடத்தில் சுகம் உண்டாகிறதோ அவனே மகன்.
எவனிடத்தில் நம்பிக்கை இருக்குமோ அவனே நண்பன்.
எவ்விடத்தில் வாழ்வு இருக்குமோ அதுவே தேசம்.
எவன் குடிமக்களைக் காப்பாற்றுகிறானோ அவனே அரசன்.
எது தர்மத்தில் செலவழிந்ததோ அதுவே நம்முடையது.
-கிருபானந்தவாரியார் சுவாமிகள்
















