ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கவிருக்கும் தமிழக வீரர்களுக்கு தலா ரூ.5 லட்சம்: முதல்வர் ஸ்டாலின் உத்தரவு! ]

டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கவுள்ள தமிழகத்தைச் சேர்ந்த தடகள வீரர், வீராங்கனைகளுக்கு தலா ரூ.5 லட்சம் வழங்க முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

ஆரோக்கிய ராஜீவ், நாகநாதன் பாண்டி, சுபா வெங்கடேசன், தனலட்சுமி, ரேவதிக்கு தலா ரூ. 5 லட்சம் ஊக்கத்தொகையாக வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. ஏற்கெனவே பவானிதேவி, சரத் கமல், சத்யன் ஞானசேகரன், நேத்ரா குமணன், கணபதி, வருண் ஆகியோருக்கு ரூ.5 லட்சம் வழங்கப்பட்டது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!