கொலம்பியாவிலுள்ள சிறைச்சாலையொன்றில் கைதிகளாகவுள்ள பெண்களுக்கான அழகுராணி போட்டியொன்று அண்மையில் நடைபெற்றது.
பகோட்டா நகரிலுள்ள இச்சிறைச்சாலையில் தற்போது 2222 பெண் கைதிகள் உள்ளனர். கடந்த 18 வருடங்களாக அக்கைதிகளிடையே அழகுராணிப் போட்டிகள் நடைபெற்று வருகின்றன.
இம்முறை நடைபெற்ற போட்டிகளில் தொலைக்காட்சி மற்றும் இசைத்துறை நட்சத்திரங்கள் சிலர் நடுவர்களாகப் பங்குபற்றினர்.
56 வயதான மரியா விலேரியல் எனும் பெண்ணும் இப்போட்டியில் பங்குபற்றினார். 3 பிள்ளைகள், 9 பேரப்பிள்ளைகளைக் கொண்ட பெண் இவர். இச்சிறையிலுள்ள கைதிகளில் பெரும்பாலானோர் போதைப்பொருள் கடத்தல் குற்றத்திற்காக சிறைத்தண்டனை விதிக்கப்பட்டவர்களும் வழக்கு விசாரணையை எதிர்நோக்கியுள்ளவர்களுமாவர். வெளிநாடுகளைச் சேர்ந்த 50 பெண்களும் இவர்களில் அடங்குவர்.
“இவர்கள் சிறையில் இருந்தபோதிலும் பெண்களுக்கான தன்மைகளை இழந்துவிடவில்லை” என சிறைச்சாலை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
















