பாதியாக குறைந்த கொரோனா!

அவசர சிகிச்சை பிரிவுகளில் அனுமதிக்கப்படும் கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை 50வீதத்தால் குறைவடைந்துள்ளது என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார்.

நாட்டில் மீண்டும் கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்காது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க பொதுமக்களின் ஒத்துழைப்பு மிகவும் அவசியம். பொதுமக்கள் முகக் கவசம் அணிவதை தவிர்ப்பதை சில பகுதிகளில் காண முடிகிறது.

சுகாதாரப் பாதுகாப்பு வழிகாட்டல்களை பின்பற்றாதுவிட்டால் நாட்டில் மீண்டும் கொரோனா வைரஸ் தொற்று பரவில் ஏற்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!