பச்சை நிறத்தில் மாறிய ராமநாதபுரம் கடல்: அபாயத்தில் கடல்வாழ் உயிரினங்கள்!

ராமநாதபுரம் மாவட்டத்தில் தெற்கே மன்னார் வளைகுடா கடல் பகுதியை தொடர்ந்து, வடக்கே பாக் ஜலசந்தி கடல் நீரும் பச்சையாக மாறியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் சிறிய ரக மீன்கள் இறந்து கரை ஒதுங்கத் தொடங்கி உள்ளன. தெற்கே மன்னார் வளைகுடா கடலில் கடந்த வாரம் பாம்பன் முதல் கீழக்கரை வரையிலான பகுதியில் நீரோட்டத்தால் பச்சை நிறப் பூங்கோரைப் பாசிகள் கரை ஒதுங்கின. இதனால் மன்னார் வளைகுடா பகுதியில் கடல்நீர் பச்சை நிறத்தில் காணப்பட்டது.

கடந்த வாரம் பாலூட்டி இனங்களான 2 டால்பின்கள் உட்பட பல்லாயிரக்கணக்கான மீன்கள் இறந்த நிலையில் கரை ஒதுங்கின. இந்நிலையில் தற்போது தெற்கே பாக் ஜலசந்தி கடல் நீரின் நிறமும் பச்சையாக மாறியுள்ளது.

அதனைத் தொடர்ந்து வில்லூண்டி தீர்த்தம் பகுதியில் சிறிய ரக மீன்கள் இறந்தநிலையில் கரை ஒதுங்கின. 2019ஆம் ஆண்டு ‘நாட்டிலுக்கா சின்டிலெம்ஸ்’ எனும் ‘பூங்கோரை’ பாசிகள் பெருமளவில் படர்ந்ததால் மீன்களின் செதில்கள் அடைபட்டு சுவாசிக்க மீன்கள் இறந்து கரை ஒதுங்கின.

தற்போது தெற்கே பாக் ஜலசந்தி கடற்பகுதியிலும் மீன்கள் இறந்து மிதப்பதால் மீனவர்கள் அச்சம் அடைந்துள்ளனர். இந்நிலையில் கடல் மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்பிவிடும் என மண்டபம் கடல்மீன் ஆராய்ச்சி நிலைய விஞ்ஞானிகள் கூறிகின்றனர்.

செப்டம்பர், அக்டோ பரில் அதிக ளவில் உற்பத்தியாகும் ‘நாட்டிலுக்கா சின்டிலெம்ஸ்’ என்ற பூங்கோரை கடற்பாசியால் கடல் நீர் பச்சை நிறத்தில் காட்சி அளிப்பதாக அவர்கள் விளக்கம் அளித்துள்ளனர்.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!