பாக்குநீரிணை கடல் பகுதியில் மீன்பிடித்த இந்தியா, மண்டபம் பகுதியைச் சேர்ந்த 4 மீனவர்கள் காணாமல் போயுள்ளனர்.
நேற்றுக்காலை மண்டபத்திலிருந்து தமது படகுகளில் மீன்பிடிக்க சென்ற மீனவர்களே இவ்வாறு காணாமல் போயுள்ளனர்.
மண்டபத்திலிருந்து நேற்று காலை கச்சத்தீவு அருகே 250 படகுகளில் மீன்பிடிக்க சென்ற மீனவர்களில் கருப்பையாவுக்கு சொந்தமான படகில் மீன்பிடிக்க சென்ற 4 மீனவர்கள் கரை திரும்பவில்லை.
இதனால் அவர்களை மண்டபம் கடலோர காவல்படையினர் ஹெலிகொப்டர் மூலமாக தேடி வருகின்றனர்.
குறித்த சம்பவம் தொடர்பில் தமிழக மீன்வளத்துறை அதிகாரிகள் வழக்கு பதிவுசெய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!