மாத்தறை துப்பாக்கிச் சூட்டில் எழுவர் காயம்: ஒருவரது நிலை கவலைக்கிடம்

election-violence2மாத்தறை நகரப் பகுதியில் ஏற்பட்ட மோதலில் எழுவர் காயமடைந்துள்ள நிலையில் ஒருவரது நிலை கவலைக்கிடமாகவுள்ளதாக மாத்தறை வைத்தியசாலை தகவல்கள் தெரிவித்துள்ளன.

மோதல் ஏற்பட்ட நிலையில் இங்கு மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டின் காரணமாக இவர்கள் காயமடைந்துள்ளனர்.

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரை பதவியிலிருந்து நீக்குமாறு கோரி ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டுள்ளது.

இதேவேளை ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஆதரவு தெரிவித்தும் இப் பிரதேசத்தில் ஆர்ப்பாட்டம் இடம்பெற்றுள்ளது.

ஐக்கிய தேசியக் கட்சியின் ஆதரவாளர் குழுக்களுக்கு இடையிலேயே மோதல் ஏற்பட்டுள்ளதாக பொலிஸர் தெரிவித்தனர்.

Tags: , ,

Leave a Reply