3 மாதங்களாக போத்தலில் அடைக்கப்பட்டிருந்த பாம்பொன்று வெளியில் வந்து, தன்னை போத்தலில் அடைத்த பெண்ணை தீண்டிய சம்பவ மொன்று சீனாவில் இடம்பெற்றுள்ளது.
சீனாவின் ஹெய்லொங்ஜிஆங் மாகாணத்தைச் சேர்ந்த பெண்ணொருவரே இவ்வாறு பாம்பினால் தீண்டப்பட்டுள்ளார்.
விரியன் பாம்பொன்றினை குறித்த பெண் வைன் நிரப்பிய கண்ணாடி போத்தலில் இட்டு 3 மாதங்களுக்கு முன்பு அடைத்து வைத்துள்ளார். இந்நிலையின் வைன் சற்றே குறைவடைய மீண்டும் அதில் வைனை நிரப்புவதற்கு திறந்துள்ளார்.
இதன்போது திடீரென வெளியான பாம்பு அவரது விரலில் கொத்தியுள்ளது. இதனையடுத்து அப்பெண் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சைக்கு பின் இவர் வீடு திரும்பிவிட்டார். ஆனால் உச்ச கோபத்திலிருந்த பாம்பை கொன்றுவிட்டனர்.
ஷெஜிஊ எனப்படும் பாம்பு வைன் என்ற பாரம்பரி வைத்தியம் உடல் நலத்திற்கு நன்மை பயக்கும் என சீனாவில் நம்பப்படுகிறது. இதற்காகவே அப்பெண் பாம்பினை வைனில் அடைத்துள்ளார். “ஷெஜிஊ என்னில் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கலாம்.
அதற்கு முன் பாம்பு என்னை தீண்டி வைத்தியசாலைக்கு அனுப்பிவிட்டது” என பாம்பு தீண்டிய பெண் கூறியுள்ளார். நீண்ட நாட்களுக்கு குளிரில் பாம்பு வாழத்தக்கது. ஆனால் ஒட்சிசன் கிடைக்கவேண்டும்.
எனவே போத்தல் சரியாக மூடப்படாமல் இருந்திருக்கலாம். அதுவே பாம்பு உயிருடன் இருக்க காரணமாக இருக்கலாம் எனக் கூறப்படுகின்றது.
















