விஜயகலாவின் உரை – விசாரணை நடத்துமாறு காவல்துறை மா அதிபருக்கு சட்டமா அதிபர் உத்தரவு

????????????????????????????????????
விடுதலைப் புலிகளை மீள உருவாக்க வேண்டும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்த கருத்து தொடர்பாக விசாரணை நடத்துமாறு, சிறிலங்கா காவல்துறை மா அதிபருக்கு சட்டமா அதிபர் அறிவுறுத்தியுள்ளார்.

விஜயகலா மகேஸ்வரனின் கூற்று தொடர்பாக நடவடிக்கை எடுக்குமாறு, சட்டமா அதிபர் ஜெயந்த ஜெயசூரியவுக்கு சபாநாயகர் கரு ஜெயசூரிய அறிவித்திருந்தார்.

இதனடிப்படையில், உடனடியாக விஜயகலா மகேஸ்வரன் வெளியிட்ட கருத்து தொடர்பாக விசாரணை நடத்தி தமக்கு அறிக்கை சமர்ப்பிக்குமாறு சிறிலங்கா காவல்துறை மா அதிபர் பூஜித ஜயசுந்தரவுக்கு சட்டமா அதிபர் அறிவுறுத்தியுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!