150 வருடங்கள் பழைமையான அப்பிள் மரத்தினை வெட்டாமல் தடுப்பதற்காக சுற்றுச்சூழல் போராளி ஒருவர் அந்த மரத்தின் மீது குடியிருப்பை ஏற்படுத்தி போராடுகிறார்.
இங்கிலாந்தின் கிளோசெஸ்டர்ஷெயாரைச் சேர்ந்த ரொவன் பரோ என்ற 44 வயது நபரே இவ்வாறு மரத்தினை வெட்டாமல் தடுக்கப் போராடுகிறார்.
கிளோசெஸ்டர்ஷெயார் பகுதியில் ஆடம்பர குடியிருப்பு திட்டமொன்றினை அமைப்பதற்காக கட்டுமான நிறுவனமொன்று இப்பகுதியிலுள்ள குறித்தளவான நிலப்பரப்பினை வாங்கியுள்ளது. ஆனால் இத்திட்டத்தி ற்கு எதிரா நகரசபைக்கு பல முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன.
பிரச்சினைகளை முடிவுக்கு கொண்டுவந்து 15 நாட்களுக்கு முன்பிருந்து கொந்தராத்துக்காரர்கள் அவ்விடயத்தில் வேலைகளை ஆரம்பித்துள்ளனர். இந்நிலை யில் குறித்த நிலப்பரப்பிலுள்ள 150 வருடங்கள் பழைமையான அப்பிள் மரத்தினை வெட்ட வேண்டி ஏற்பட்டுள்ளது.
இதனை தடுப்பதற்கான முயற்சிலேயே ரொவன் ஈடுபடுகின்றார். இவர் மரத்தில் படுக்கையை அமைத்து அமர் ந்துள்ளார். இவருக்குத் துணையாக 39 வயதான மெத்தியூ ஸெல் என்பவரும் இணைந்துள்ளார். மரத்தினை பாது க்கும் இவர்களது திட்டத்திற்கு அப்பகுதியிலுள்ள குடியிருப்பாளர்களும் ஆதரவு தெரிவித்து ரொவனுக்கு உணவு மற்றும் பானங்களை வழங்குகின்றனர்.
பொலிஸாரின் தலையீட்டில் இவர்கள் நேற்றுமுன்தினம் காலை மரத்திலிருந்து இறக்கப்பட்டுள்ளனர். பின்னர் மரம் முக்கால்வாசி வெட்டப்பட்ட நிலையில் மீண்டும் ஆர்ப்பாட்டக்காரர்கள் மரத்தில் ஏறியிருப்பதாக பொலிஸ் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
குடியிருப்புகளுக்கு நாங்கள் எதிர்ப்பில்லை. அதுபோல இயற்கையும் எமக்கு அவசியம். நமது பரம்பரியங்களில் அப்பிள் மரமும் ஒன்று என பிரதேச வாசிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த அப்பிள் மரத்தினை புதிதாக அமைக்கும் ஆடம்பரக் குடியிருப்பின் தோட்டதில் இணைத்தால் என்ன என ரொவன் கேள்வி எழுப்பியுள்ளார். தற்போது இக்குடியிருப்புத் திட்டத்தின் கட்டுமானப் பணிகள் நிறு த்தி வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
















