ஆசைக்கு இணங்காததால் மருமகளை நடுரோட்டில் வெட்டிக்கொன்ற தாய்மாமன்!

இந்த பயங்கர சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாது:- கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே உள்ள வர்க்கலா பகுதியை சேர்ந்தவர் ஷாலு (வயது 37). இவருடைய கணவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். ஷாலு அந்தப்பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வந்தார்.
    
சம்பவத்தன்று இவர் தனது நிறுவனத்தில் இருந்து வீட்டிற்கு சாப்பிடுவதற்காக ஸ்கூட்டியில் வந்து கொண்டிருந்தார். அப்போது ஷாலுவின் தாய் மாமா அணில் (46) என்பவர் அங்கு வந்தார். அவர், ஸ்கூட்டியில் வந்த ஷாலுவை வழிமறித்தார்.

பின்னர் தான் வைத்திருந்த அரிவாளால், ஷாலுவை சரமாரியாக வெட்டினார். இதில் அவர் ரத்தவெள்ளத்தில் கீழே சரிந்ததோடு மயங்கி விழுந்தார். இதனை கவனித்த அக்கம் பக்கத்தினர் அங்கு ஓடி வந்தனர். பொதுமக்கள் வருவதை கண்டதும் அணில் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.

இதையடுத்து அக்கம்பக்கத்தினர், ஷாலுவை மீட்டு சிகிச்சைக்காக திருவனந்தபுரம் அரசு மருத்துவமனையில் சேர்த்தார்கள். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் சிகிச்சை பலனின்றி ஷாலு பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து திருவனந்தபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, ஷாலுவை வெட்டிக் கொன்ற அணிலை கைது செய்தனர். அவர் போலீசில் அளித்த வாக்குமூலத்தில் என்னுடைய மருமகள் ஷாலுவை என்னுடைய ஆசைக்கு இணங்குமாறு கூறினேன். ஆனால் அவர் மறுத்தார். இதனால் அவரை வெட்டிக் கொன்றேன் என்றார். கைது செய்யப்பட்ட அணில், கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

பெண் ஒருவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டசம்பவம் அந்தப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!