அமெரிக்க செனட் சபை உறுப்பினர்கள் அந்நாட்டு கடன் வரையறையை அதிகரிப்பதற்கான உடன்படிக்கையொன்றை நெருங்கி வந்துள்ளதாக அமெரிக்க பாராளுமன்ற வட்டாரங்கள் தெரிவித்தன.
வரவு -செலவுத் திட்டமொன்றுக்கு அமெரிக்க பாராளுமன்றத்தின் இரு சபைகளும் இணக்கம் காணத் தவறியதையடுத்து, அந்நாட்டின் அரசாங்க நிறுவனங்கள் பகுதியாக மூடப்பட்டன.
மேற்படி நிறுவனங்கள் மூடப்பட்டுள்ள நிலையை முடிவுக்கு கொண்டு வருவதற்கு அரசாங்கத்தின் கடன் வரையறைகளை அதிகரிப்பதற்கான உடன்படிக்கையொன்றை குடியரசுக் கட்சியினர் நெருங்கி வருவதாக கூறப்படுகிறது.
மேற்படி சட்டமூலமானது அமெரிக்க பிரதிநிதிகள் சபையின் அங்கீகாரத்தை பெற வேண்டியுள்ள நிலையில், அந்த சபையிலுள்ள குடியரசுக் கட்சி உறுப்பினர்கள் இது தொடர்பில் எதுவித இணக்கப்பாட்டையும் இதுவரை எட்டவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
அமெரிக்காவானது தனது 16.7 திரில்லியன் டொலர் கடன் வரையறையை வியாழக்கிழமைக்குள் அதிகரிக்க வேண்டியுள்ளது.
இந்நிலையில், மேற்படி நிதி நெருக்கடி யானது நாட்டின் பொருளாதாரத்துக்கு பாரிய சீர்கேட்டை விளைவிக்கும் என அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா எச்சரித்துள்ளார்.
















