திருச்சியில் உலகத் தமிழ் மாநாடு!

தமிழ் வளர்ச்சிக்கும், தமிழ் ஆர்வலர்களுக்கும் மிகப்பெரிய களமாக உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடுகள் விளங்குகின்றன. இந்த மாநாட்டை நடத்துவதை தமிழக அரசுகள் பெரிய கவுரவமாக கருதுகின்றன. தமிழ் மொழியின் வளர்ச்சிக்கான திட்டங்களை வகுக்கவும், உலகெங்கும் வாழும் தமிழறிஞர்களை ஒன்றிணைக்கும் வகையிலும் 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை உலகத்தமிழ் மாநாடு நடத்த வேண்டும் என்று 1964-ம் ஆண்டு டெல்லியில் தொடங்கப்பட்ட உலகத் தமிழ் ஆராய்ச்சி மன்றத்தில் முடிவு செய்யப்பட்டது.
   
கடந்த மாநாடுகள் அந்த வகையில் முதல் மாநாடு 1966-ம் ஆண்டு கோலாலம்பூரில் (மலேசியா) நடத்தப்பட்டது. அதைத்தொடர்ந்து சென்னை (1968-ம் ஆண்டு), பாரிஸ் (1970), இலங்கை (1974), மதுரை (1981), கோலாலம்பூர் (1987), மொரிஷியஸ் (1989), தஞ்சாவூர் (1995), கோலாலம்பூர் (2015), சிகாகோ (2019) ஆகிய இடங்களில் நடத்தப்பட்டன. உலகத் தமிழ் செம்மொழி மாநாடு 2010-ம் ஆண்டு கோவையில் நடைபெற்றது.

இந்த நிலையில் 12-வது உலகத் தமிழ் மாநாட்டை திருச்சியில் நடத்த வேண்டும் என்று பல்வேறு அமைப்பினர், தமிழ் ஆர்வலர்கள் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். தமிழகத்திற்கு திருச்சி மையப் பகுதி என்பதால் அதை அரசிடம் தமிழ் ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர். இந்த நிலையில் திருச்சி துவரம்குறிச்சி, முஸ்லிம் கிழக்குத் தெருவைச் சேர்ந்த நரம்பியல் டாக்டர் எம்.ஏ.அலீம், உங்கள் தொகுதியில் முதல்-அமைச்சர் துறைக்கு கடந்த ஏப்ரல் 1-ந்தேதி மனு அளித்திருந்தார்.

அதில், 12-வது உலகத் தமிழ்ச் சங்க மாநாட்டை திருச்சியில் நடத்த வேண்டும். அதற்கு அரசு ஒப்புக்கொள்ளுமா? என்று கேட்டிருந்தார். திராவிட கலாசாரம் மேலும் அவர், இதுவரை 11 உலகத் தமிழ் மாநாடுகள் நடைபெற்றுள்ளன. 11-வது மாநாடு சிகாகோவில் நடந்தது. இதுவரை திருச்சியில் உலகத் தமிழ் மாநாடு எதுவுமே நடத்தப்படவில்லை. எனவே 12-ம் உலகத் தமிழ் மாநாட்டை திருச்சியில் நடத்தும்படி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை கேட்டுக் கொள்கிறேன்.

அந்த மாநாட்டை, ‘திராவிட கலாசாரம் மற்றும் அறிவியல் தமிழ்” என்ற தலைப்பில் நடத்த வேண்டும் என்றும் கூறியுள்ளார். அரசு கொள்கை முடிவு அந்த மனுவுக்கு தற்போது தமிழ் வளர்ச்சி இயக்குனர் பதில் கடிதம் அனுப்பியுள்ளார். அதில், திருச்சியில் உலகத் தமிழ் மாநாட்டை நடத்துவதென்பது அரசின் கொள்கை முடிவாகும் என்றும் அதன் மூலம் மனுதாரரின் கோரிக்கை ஏற்கப்பட்டுள்ளது என்றும் கூறப்பட்டுள்ளது. அதன்படி அடுத்த உலகத் தமிழ் மாநாடு திருச்சியில் நடைபெறும் என்பது உறுதியாகி இருக்கிறது. அந்த மாநாடு நடைபெறும் தேதியை அரசு பின்னர் அறிவிக்கும்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!