பதினைந்து வயதுடைய சிறுமி ஒருவரை அவரது பாதுகாவளர்களிடமிருந்து கடத்திச் சென்று அச்சிறுமியுடன் குடும்பம் நடத்திய குற்றச்சாட்டின் பேரில் இளைஞர் ஒருவரைக் கைது செய்துள்ளதாக புத்தளம் பொலிஸார் தெரிவித்தனர்.
புத்தளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தளுவை நின்தெனிய எனும் பிரசேத்தைச் சேர்ந்த சிறுமியே இவ்வாறு கடத்திச் செல்லப்பட்டு குடும்ப வாழ்வில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதுடன் அப்பிரதேசத்தைச் சேர்ந்த 22 வயது இளைஞர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளவராவார்.
குறித்த சிறுமியின் தாய் தனது தாயின் பொறுப்பின் சிறுமியை ஒப்படைத்து விட்டு வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பெற்றுச் சென்றுள்ளார். இதன் பின்னர் சிறுமி தனது பாட்டியின் பொறுப்பில் இருந்து வந்துள்ளார்.
இந்நிலையில் அப்பிரதேசத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவருடன் இச்சிறுமி காதல் தொடர்பினை ஏற்ப டுத்திக் கொண்டிருந்துள் ளார்.
இத்தொடர்பின் பலனாக சில மாதங்களுக்கு முன்னர் குறித்த சிறுமியை சந்தேக நபரான இளைஞன் அவளது பாட்டிக்குத் தெரியா மல் கடத்திச் சென்று இருவரும் கணவன் மனைவி யாக வாழ்ந்து வந்துள்ளனர்.
இந்நிலையில் வெளிநாடு சென்றிருந்த சிறுமி யின் தாய் நாடு திரும்பிய பின்னர் இச்சம்பவம் தொடர்பில் புத்தளம் பொலிஸ் நிலையத்தில் செய்த முறைப்பாட்டைய டுத்து விசாரணைகளை மேற்கொண்ட புத்தளம் பொலிஸார் சந்தேக நபரான இளைஞரை நேற்று கைது செய்துள்ளனர். இச்சம்பவம் தொடர்பில் புத்தளம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற் கொண்டு வருகின்றனர்.
















