“ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கான நேரம் குறைக்கப்படவில்லை” – அரசு அதிகாரிகள் தகவல்! January 14, 2023 9:21 am Twitter Facebook Google+ LinkedIn Pinterest பொங்கலையொட்டி நடைபெற உள்ள ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கான நேரம் எதுவும் குறைக்கப்படவில்லை என்று கால்நடை பராமரிப்புத்தறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மதுரை மாவட்டம் அவனியாபுரம், பாலமேடு மற்றும் அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டுப் போட்டிகளுக்கான ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகம் மற்றும் விழாக்குழுவினர் செய்து வருகின்றனர். இந்த ஆண்டு ஜல்லிக்கட்டுப் போட்டிகள் காலை 8 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மட்டுமே நடத்தப்படும் என்று அண்மையில் தகவல் வெளியானது. இதற்கு கால்நடை பராமரிப்புத்துறை அதிகாரிகள் மறுப்பு தெரிவித்துள்ளனர். ஜல்லிக்கட்டு போட்டிகள் வழக்கம் போல் காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும் என்றும், இந்த முறை நேரம் எதுவும் குறைக்கப்படவில்லை என்றும் கால்நடை பராமரிப்புத்துறை அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர். * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி! Related Posts உலகப் பிரச்சனையாக உருவெடுக்கும் உணவுப் பண்டங்களின் விலை உயர்வு! * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன்… நிலவில் பிளாஸ்மா இருப்பதை கண்டறிந்தது விக்ரம் லேண்டர்! * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன்… தமிழகத்திற்கு காவிரியில் இருந்து தண்ணீர் திறப்பு! * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன்…