பிரிட்டனைச் சேர்ந்த கலைஞர் ஒருவர் பழைய கார் ஒன்றை ஹொலிவூட் பாணியில் பாரிய ரோபோவாக மாற்றிமைத்துள்ளார்.
ஹெட்டெய்ன் பட்டேல் எனும் கலைஞரே காரை ரோபோவாக மாற்றியுள்ளார். இவர் பிரிட்டனில் குடியேறிய இந்திய தம்பதியின் மகனாவார்.
போர்ட் பீஸ்டா ரக காரொன்றே இவ்வாறு ரோபோவாக மாற்றப்பட்டுள்ளது. இதற்காக மூன்று மாத காலத்தை செலவிட்டுள்ளார் ஹெய்டன் பட்டேல்.
இவரின் தந்தை, வாகனங்களை பிரேத வாகனங்களாக மாற்றுவதை தொழிலாக கொண்டுள்ளார். பட்டேலின் சகோதரர் ஒரு பொறியியலாளர். இவ்விருவரும் பட்டேலின் இந்த முயற்சிக்கு உதவினார்கள் என பட்டேல் தெரிவித்துள்ளார்.
17 வயதில் தான் முதன்முதலாக செலுத்திய கார் இதுவென்பதால் இக்காரை பயன்படுத்தி சிற்பமொன்றை நிர்மாணிக்க வேண்டும் என தான் விரும்பியதாக பட்டேல் கூறுகிறார்.
தான் உருவாக்கிய ரோபோ சிற்பமானது இந்தியாவிலுள்ள உழைக்கும் வர்க்க மக்களுக்கும் பிரிட்டனிலுள்ள தனது குடும்பத்துக்குமான பிணைப்பை சித்தரிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
















