வீட்டு வேலை செய்பவர்களுக்கு தமிழக அரசு ஊதியம் நிர்ணயம்

வீட்டு வேலை செய்பவர்களுக்கு குறைந்தபட்ச சம்பளத்தைஅரசு நிர்ணயித்துள்ளது.

தமிழகத்தில் கடந்த பத்து ஆண்டுகளில் முதல் முறையாக வீட்டு வேலை செய்பவர்களுக்கான ஊதியத்தை அரசுநிர்ணயித்துள்ளது.

கோவை தொழிலாளர் நலத்துறை துணை ஆணையர் தலைமையிலான குழு ஆய்வு நடத்தி அளித்த பரிந்துரைகளின் அடிப்படையில் வீட்டு வேலை செய்பவர்களுக்கான குறைந்தபட்ச ஊதியம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதன்படி செவிலியர்கள் தினமும் ஒரு மணிநேரம் பணிபுரிந்தால் அதற்காக குறைந்தது மாநகராட்சி பகுதியில் 39 ரூபாயும், நகராட்சி பகுதியில் 35 ரூபாயும் ஊதியமாக கொடுக்க வேண்டும்.

அவர்கள் 8 மணி நேரம் பணிக்கு முறையே ரூ.8,050மற்றும் 7,246 ரூபாயும் ஊதியமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சமையல், தோட்ட வேலை செய்பவர்களுக்கு மாத ஊதியமாக குறைந்தபட்சம் நகரங்களில் 7, 823 ரூபாய் மற்றும் 7,041ஊதியம் தர வேண்டும். துணி துவைப்பவர்கள் , பாத்திரம் துலக்குபவர்களுக்குமாநகராட்சி பகுதிகளில் 7, 535 ரூபாயும், நகராட்சி பகுதிகளில் 6,836 ரூபாயும் ஊதியமாக தர அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

வீட்டிலேயேதங்கி வேலைபார்ப்பவர்களுக்குஇதைவிட கூடுதலாக 10% ஊதியம் அளிக்கவேண்டும். அரசு நிர்ணயித்ததைவிட குறைவாக ஊதியம் அளித்தால் அது மனித உரிமை மீறலாக கருதப்படும். அதன்படி வேலை வழங்கும் வீட்டின்உரிமையாளர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுவார்கள் என்று கூறப்படுள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!