வட மாகாண முதலமைச்சர் சீ.வீ. விக்னேஸ்வரனின் அழைப்பை இந்திய பிரதமர் டொக்டர் மன்மோகன் சிங் ஏற்றுக்கொண்டுள்ளார். யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்யுமாறு இந்திய பிரதமரிடம், விக்னேஸ்வரன் கடிதம் ஊடாக கோரியிருந்தார். இந்த கோரிக்கையை பிரதமர் ஏற்றுக்கொண்டதாக இந்திய ஊடகமொன்று தகவல் வெளியிட்டுள்ளது.
வடக்கு தமிழ் மக்களுக்கு ஆதரவளிக்கும் நோக்கில் பிரதமர் இலங்கையில் நடைபெறவுள்ள பொதுநலவாய நாடுகள் தலைவர்கள் அமர்வுகளில் பங்கேற்கக் கூடுமென நம்பிக்கை வெளியிடப்பட்டுள்ளது. விக்னேஸ்வரனின் கடிதம் கிடைக்கப்பெற்றதாக இந்திய வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் செயிட் அக்புர்டீன் தெரிவித்துள்ளார். இந்த அழைப்பு குறித்து இறுதித் தீர்மானம் எடுக்கப்படும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
வடக்கில் தேர்தல் நடாத்துவதற்கும் ஏனைய விவகாரங்களுக்கும் இந்தியா வழங்கி வரும் உதவிகளுக்கு விக்னேஸ்வரன் நன்றி பாராட்டியுள்ளதாகத் தெரிவித்துள்ளார். பல்வேறு காரணிகளைக் கருத்திற்கொண்டு யாழ்ப்பாண விஜயம் குறித்து இறுதித் தீர்மானம் எடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
















