மே 17 இயக்கத்தின் திருமுருகன் காந்தி மீண்டும் கைது

ஐக்கியநாடுகள் மனித உரிமை பேரவையில் ஸ்டெர்லைட் ஆலை படுகொலை குறித்து உரையாற்றிய விட்டு இந்திய திரும்பிய மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி பெங்களுர் விமானநிலையத்தில் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

ஸ்டெர்லைட் ஆலை படுகொலை தொடர்பில் திருமுருகன் காந்தி ஜெனீவாவில் ஆதாரங்களை பதிவு செய்ததுடன் உரைகளையும் நிகழ்த்தியிருந்தார்.

இந்நிலையில் அவர் இன்று இந்தியா திரும்பியவேளை கைதுசெய்யப்பட்டுள்ளார்.

இது குறித்து கருத்து வெளியிட்டுள்ள மே 17 இயக்கத்தினர் தூத்துக்குடி படுகொலைகளை அம்பலப்படுத்தியதற்காக பழைய வழக்குகளை காரணம் காட்டி பாஜக அரசு அவரை கைதுசெய்துள்ளது, இது மத்திய மாநில அரசாங்கங்களின் அடக்குமுறையை வெளிப்படுத்துகின்றது என தெரிவித்துள்ளனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!