வவுனியா மாவட்ட மக்கள் ஒன்றியத்தினரால் வவுனியா சமனங்குளம் அரசினர் தமிழ் கலவன் பாடசாலையின் செயற்பாடுகளை ஊக்குவிக்கும் பொருட்டு, பாடசாலைக்கான ஒலிபெருக்கித் தொகுதி ஒன்று அன்பளிப்பாக வழங்கப்பட்டுள்ளது.
வவுனியா மாவட்ட மக்கள் ஒன்றியத் தலைவரும் முன்னாள் நகரசபை உறுப்பினருமான தேசமான்ய சு.குமாரசாமி, அவ் அமைப்பின் செயலாளர் கு.சஜிக்குமார் ஆகியோர் இதனை பாடசாலை அதிபர் திரு.எஸ்.சிவநாதன் அவர்களிடம் கையளித்துள்ளனர்.
















