விதிமுறையை அறிந்திருக்கவில்லை என்கிறார் நாடுகடத்தப்பட்ட கவிஞர் ஜெயபாலன்

jeyapalanதமிழ் பேசும் மக்­க­ளுக்கு தனி­யான மாநிலம் என்ற எனது கருத்தை தனி நாடு என்று இலங்கை பாது­காப்புப் பிரிவு அர்த்­தப்­ப­டுத்திக் கொண்­ட­தாகத் தெரி­வித்­துள்ள கவிஞர் வ.ஐ.ச.ஜெய­பாலன், விசா விதி­முறை பற்றி தான் அறிந்­தி­ருக்­க­வில்லை என்றும் குறிப்­பிட்­டுள்ளார்.

செவ்­வாய்க்­கி­ழமை நோர்­வேக்கு நாடு­க­டத்­தப்­பட்ட ஜெய­பாலன் பி.பி.சி. ஊட­கத்­திடம் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்­துள்ளார். அவர் மேலும் கூறி­யுள்­ள­தா­வது:-

யாழ்ப்­பா­ணத்­தி­லி­ருந்து தனது சொந்த ஊரான வட­கா­டுக்குச் சென்று தனது தாயாரின் நினை­வி­டத்தில் அஞ்­சலி செலுத்தச் சென்­று­கொண்­டி­ருக்­கையில் பயங்­க­ர­வாதத் தடுப்பு பொலி­ஸாரால் தடுத்து நிறுத்­தப்­பட்டேன்.

ஆனால், தாயாரின் நினை­வி­டத்­துக்குச் செல்­லாமல் திரும்­ப­மாட்டேன் என்று தான் கூறி சாலையில் அமர்ந்து போரா­டிய பின்னர் தாயின் நினை­வி­டத்­துக்குச் செல்ல அனு­ம­தித்­தனர்.

இந்­தியா மற்றும் ஐரோப்­பிய நாடு­களில் சுற்­றுலா விசாவில் செல்லும் போது உரை நிகழ்த்­தி­யி­ருக்­கிறேன். அங்­கெல்லாம் இதற்­கான ஜன­நா­யக உரிமை இருக்­கி­றது. ஆனால், இலங்­கையில் இது அனு­ம­திக்­கப்­ப­டு­வ­தில்லை என்­பதை உணர்ந்­தி­ருக்­க­வில்லை.

தமிழ் மற்றும் முஸ்லிம் மக்­களின் ஒற்­றுமை பற்றிப் பேசினேன். தமிழ் பேசும் மக்­க­ளுக்கு ஒரு மாநிலம் என்று தான் சொன்ன கருத்தை தனி நாடு என்று பாது­காப்புப் பிரி­வினர் புரிந்­து­கொண்­டனர்.
ஆனால், தன்னைப் பற்றி இலங்கை அமைச்­சர்­க­ள­ளான பஷீர் ஷேகுதாவூத் மற்றும் ரவூப் ஹக்கீம் ஆகியோர் சாதகமான கருத்துக்களைத் தெரிவித்திருக்கின்றனர் என தெரிவித்துள்ளார்.

Tags: ,

Leave a Reply