இன்ரர்போலின் தேடப்படுவோர் பட்டியலில் 80 இலங்கையர்கள்

interpolபயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்ட 80 இலங்கையர்களை கைது செய்வதற்காக சர்வதேச பொலிஸார் (இன்டர்போல்) விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

இவர்கள் மீது பயங்கரவாத நடவடிக்கைகள் , நிதி மோசடிகள் மற்றும் ஏனைய குற்றச் செயல்களில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இவர்கள் அனைவரும் இலங்கைக்கு வெளியில் பல நாடுகளில் வசித்து வருகின்றனர். அவர்களில் நான்கு பேர் பிரித்தானியாவில் வசித்து வருகின்றனர் என இன்டர்போல் தெரிவித்துள்ளது.

பிரித்தானியாவில் இருக்கும் நான்கு பேரில் ஒருவர் வங்கி உரிமையாளர் எனவும் இவர் விடுதலைப் புலிகளின் தமிழர் புனர்வாழ்வு கழகத்தின் தலைவர் என்றும் கூறப்படுகிறது.

மேலும் இவர்களை கைது செய்ய ஸ்கொட்லண்ட் யார்ட் பொலிஸார், இன்டர்போல் பொலிஸாருக்கு உதவி செய்கின்றனர்.

Tags: ,

Leave a Reply