ஓட்டுநர் இல்லாது ரயில் என்ஜின் ஒன்று தெமட்டகொடவில் இருந்து கல்கிஸ்ஸை வரை பயணித்துள்ள சம்பவமொன்று இன்று அதிகாலை 1.45மணியளவில் இடம்பெற்றுள்ளது.
குறித்த ரயில் என்ஜின் தானியங்கி கல்கிஸ்ஸை வரை சென்று கொண்டிருந்த போது மறித்து நிறுத்தப்பட்டதாக மத்திய ரயில் கட்டுப்பாட்டு நிலையம் தெரிவித்துள்ளது.
எனினும் இதனால் எவருக்கும் எதுவித சேதமும் ஏற்படவில்லை.
இது குறித்து மத்திய ரயில் கட்டுப்பாட்டு நிலையம் விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது.
















