திருகோணமலை மாவட்டத்தின் மூதூரிலுள்ள கொட்டியாரக்குடா கடலில் ஏற்பட்ட கடல் கொந்தளிப்பினால் ஹபீப் நகர், தக்வா நகர் ஆகிய கரையோரக் கிராமங்களினுள் கடல் நீர் புகுந்துள்ளது.
நேற்று சனிக்கிழமை இரவு ஏற்பட்ட கடல் கொந்தளிப்பினால் மேற்படி கிராமங்களிலுள்ள வீடுகள், மீன்வாடிகள், வியாபார நிலையங்கள் உள்ளிட்டவற்றில் நீர் புகுந்துள்ளது.
















