இலங்கையின் நல்லிணக்க முனைப்புக்களுக்கு உதவிகளை வழங்கத் தயார் – தென் ஆபிரிக்கா

south-africaஇலங்கையின் நல்லிணக்க முனைப்புக்களுக்கு உதவிகளை வழங்கத் தயார் என தென் ஆபிரிக்கா அறிவித்துள்ளது. இலங்கையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்த சகல வழிகளிலும் ஒத்துழைப்பு வழங்க விரும்புவதாக இலங்கைக்கான தென் ஆபிரிக்க உயர்ஸ்தானிகர் ஜிவ் டொயிட்ஜ் தெரிவித்துள்ளார். நல்லிணக்க முனைப்புக்களில் பெற்றுக் கொண்ட அனுபவங்களை இலங்கையுடன் பகிர்ந்துகொள்ள முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

தென் ஆபிரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி நெல்சன் மண்டேலாவின் மறைவிற்கு இரங்கல் தெரிவிக்கும் நோக்கில் பாராளுமன்றக் கட்டிடத்தில் விசேட கூட்டமொன்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்ட தென் ஆபிரிக்க உயர்ஸ்தானிகர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். பாராளுமன்ற ஜனநாயக முறைமையை நிலைநாட்டுவதில் அமரர் நெல்சன் மண்டேலா அர்ப்பணிப்புடன் செயற்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, மண்டேலாவின் மறைவு தென் ஆபிரிக்காவிற்கு மட்டுமன்றி ஒட்டுமொத்த உலகிற்குமே இழப்பாகும் என அவர் குறிப்பிட்டுள்ளார். எங்கள் காலத்தின் மிகச் சிறந்த தலைவர்களில் ஒருவர் மண்டேலா என அவர் தெரிவித்துள்ளார்.

Tags: ,

Leave a Reply