கொழும்பை அண்மித்த அங்குலானைக் கடற்கரைப் பிரதேசத்தில் பதற்றம் நிலவுகின்றது. குறித்த பகுதியிலுள்ள வீடொன்றில் சட்டவிரோதமான முறையில் மதுபானம் விற்பதாகக் கிடைத்த தகவலை அடுத்து அங்கு விரைந்த பொலிஸாரை, கடமையைச் செய்ய விடாது பொதுமக்கள் தடுத்ததை அடுத்தே இந்த பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது.
இதனையடுத்து, மொறட்டுவை, கல்கிஸை மற்றும் அங்குலானை பொலிஸ் நிலையங்களிலிருந்து பொலிஸ் படையணிகள் அனுப்பப்பட்டு பதற்றத்தைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மேல் மாகாண காவற்துறை அறிவித்துள்ளது.
















