ஈபிடிபி எல்லாம் ஒரு கட்சி என்று உள்ளூராட்சி சபைகளில் கூட்டமைப்பு ஆட்சி அமைக்க நான் அவர்களுடன் பேரம் பேசி னேனா? அதற்கான ஆதாரங்கள் இருந்தால் வெளியிடட்டும் பார்க்கலாம் என்று தெரிவித்தார் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன்.
யாழ்ப்பணத்தில் நேற்றுச் செய்தியாளர்களைச் சந்தித்தபோது அவர் இதனைத் தெரிவித்தார். உள்ளுராட்சி சபைகளில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆட்சியமைக்க ஈபிடிபியிடம் ஆதரவு கோரியதாகவும் அதற்கான ஆதாரங்கள் தம்மிடம் இருப்பதாகவும் அந்தக் கட்சியை சேர்ந்த மூத்த உறுப்பினர்கள் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்தனர்.இது தொடர்பாக உங்களின் பதில் என்னவென ஊடகவியலளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலை வழங்கும் போதே அவர் இதனை தெரிவித்தார்.
“வடக்கு கிழக்கு மாகாணங்களில் உள்ள சபைகளில் ஆட்சியமைக்க நாம் யாரிடமும் பேரம் பேசவில்லை. ஈபிடிபி ஒரு கட்சி என்று நான் அவர்களுடன் பேசினேனா? அவ்வாறு நான் பேசி இருந்தால் ஆதாரங்களை வெளியிடுமாறு கேட்கின்றேன்.இது தொடர்பாக நான் அதிகமாக அலட்டிக்கொள்ள விரும்பவில்லை” என்றார்.
* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!