மனித உரிமைகளை ஆயுதமாகக்கொண்டு சில நாடுகள் தாக்கம் ஏற்படுத்துகின்றன : மஹிந்த ராஜ­பக்ஷ

Mahinda-Rajapaksa1பயங்­க­ர­வா­தத்தை தோல்­வி­யுறச் செய்­ததன் பின்னர் இலங்கை அடைந்­துள்ள முன்­னேற்றம் தொடர்­பாக விப­ரித்த ஜனா­தி­பதி ராஜ­பக்ஷ அந்த முன்­னேற்­றத்தை பொரு
ட்­ப­டுத்­தாமல் மனித உரி­மை­களை ஆயு­த­மாகக் கொண்டு சில நாடுகள் தாக்கம் ஏற்­ப­டுத்­து­வ­தாக குறிப்­பிட்டார்.

ஜி – 77 குழுவின் பொன்­விழா ஞாப­கார்த்த அரச மற்றும் அர­சாங்க தலை­வர்­களின் மாநாட்டில் கலந்­து­கொள்­வ­தற்­காக பொலி­வியா சென்­றுள்ள ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக்ஷ நேற்று முன்­தினம் பொலி­வியா ஜனா­தி­பதி மாளி­கையில் அந்­நாட்டு ஜனா­தி­பதி ஈவோ மொரலெஸ் ஐமாவை சந்­தித்து இரு­த­ரப்பு பேச்­சு­வார்த்­தை­களில் ஈடு­பட்­ட­போதே அவர் மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்­டுள்ளார்.

இந்த சந்­திப்­பின்­ போது இலங்­கைக்கு ஒத்­து­ழைப்பு நல்க தான் தயா­ராக இருப்­ப­தாக பொலி­வியா ஜனா­தி­பதி தெரி­வித்­துள்ளார்.

தமது பொலி­விய விஜயம் தென் அமெ­ரிக்க அர­சு­க­ளுடன் இரா­ஜ­தந்­திர உற­வு­க­ளுக்கும் பொரு­ளா­தார வர்த்­தக தொடர்­பு­க­ளுக்கும் புதிய ஆரம்­ப­மாக அமை­யு­மென தெரி­வித்­துள்ள ஜனா­தி­பதி ராஜ­பக் ஷ புதிய நாடு­க­ளுடன் நட்­பு­றவை ஏற்­ப­டுத்­திக்­கொள்­வது தமது அர­சாங்­கத்தின் கொள்­கை­யாகும் எனவும் குறிப்­பிட்­டுள்ளார்.

இலங்­கையின் அர­சியல், பொரு­ளா­தாரம், கைத் தொழில், இறக்­கு­மதி, ஏற்­று­மதி ஆகிய துறை­க­ளைப்­பற்­றிய தக­வல்­களை கேட்­ட­றிந்த பொலி­விய ஜனா­தி­பதி இலங்­கையின் ஆடைக் கைத்­தொழில் தொடர்­பாக விசேட அக்­கறை காட்­டு­வ­தாகக் குறிப்­பிட்டார். பொலி­வி­யாவின் ஆடைக் கைத்­தொ­ழிலை முன்­னேற்­று­வ­தற்கு உதவி செய்ய முடி­யுமா என ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­ப­க்ஷ­விடம் வின­வி­ய­துடன் ஆடைக் கைத்­தொ­ழிலை ஆரம்­பிப்­ப­தற்­காக இலங்­கையில் இருந்து சிறப்பு அறி­ஞர்கள் குழு­வொன்றை அனுப்­பு­மாறும் கேட்­டுக்­கொண்டார். அந்தக்கோரிக்­கைக்கு ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக்ஷ இணக்கம் தெரி­வித்­துள்ளார்.

பொலி­வியா இலங்­கை­யி­லி­ருந்து கறு­வாவை இறக்­கு­மதி செய்ய வாய்ப்­புண்டா என்­ப­தைப்­பற்றி விசா­ரித்த பொலி­வியா ஜனா­தி­பதி நீர், மின்­சார உற்­பத்தி ஆகிய துறை­களில் இலங்­கையின் அனு­ப­வத்தை பகிர்ந்­து­கொள்ள தமது நாடு விரும்­பு­வ­தா­கவும் குறிப்­பிட்­டுள்ளார்.

மேலும் இலங்­கைக்கு விஜயம் செய்­யும்­ப­டி­ ஜ­னா­தி­பதி மஹிந்த ராஜ­பக்ஷ விடுத்த அழைப்பை பொலி­விய ஜனா­தி­பதி ஏற்­றுக்கொண்டார்.

பயங்­க­ர­வா­தத்தை தோல்­வி­யுறச் செய்­ததன் பின்னர் இலங்கை அடைந்­துள்ள முன்­னேற்றம் தொடர்­பாக விப­ரித்த ஜனா­தி­பதி ராஜ­பக்ஷ அந்த முன்­னேற்­றத்தை பொருட்­ப­டுத்­தாமல் மனித உரி­மை­களை ஆயு­த­மாகக் கொண்டு சில நாடுகள் தாக்கம் ஏற்­ப­டுத்­து­வ­தாக குறிப்­பிட்டார்.

இதன்­போது கருத்து வெளி­யிட்ட பொலி­விய ஜனா­தி­பதி இத்­த­கைய பிரச்­சினை தனது நாட்­டுக்கு கடந்த காலத்­திலும் தற்­பொ­ழுதும் இருப்­ப­தாக தெரி­வித்தார்.

இரு­த­ரப்பு பேச்­சு­வார்த்­தையின் பின்னர் பொலி­விய மாளிகை முன்­றலில் கோலா­க­ல­மான இரா­ணுவ மரியாதை வழங்கப்பட்டது. இந்த சந்திப்பில் வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் வெளிவிவகார அமைச்சின் கண்காணிப்பு பாராளுமன்ற உறுப்பினர் சஜின் வாஸ் குணவர்தன, ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க, வெளி
விவகார அமைச்சின் செயலாளர் ஷேனுக்கா செனவிரட்ன ஆகியோர் கலந்து கொண்டனர்.

Tags: , ,

Leave a Reply