நொய்டாவில் லாரி மீது பேருந்து மோதல்- 8 பேர் பலி

நொய்டாவில் இன்று காலை லாரி மீது பேருந்து மோதிய விபத்தில் 8 பேர் பலியாகினர். மேலும் 30 பேர் படுகாயமடைந்தனர்.

ஆக்ராவில் இருந்து பயணிகள் டபுள் டக்கர் பேருந்து நொய்டாவிற்கு இன்று காலை சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்து யமுனா எக்ஸ்பிரஸ் சாலையில் சென்றபோது, லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது.

இச்சம்பவம் அதிகாலை 5 மணி அளவில் நடந்துள்ளது. அப்பகுதியில் இருந்தவர்கள் விபத்து குறித்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

இந்த விபத்தில் பேருந்தில் பயணித்த 8 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். 30 பேர் படுகாயமுற்றனர். இதையடுத்து அவர்களை போலீசார் உடனடியாக அருகிலிருந்த மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த கோர சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் உடல் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மேலும் இவ்விபத்து குறித்து அப்பகுதியில் போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!