கைபேசிக்கு வந்த குறுஞ்செய்தி: 5 நிமிடத்தில் மாயமான 9 லட்சம் ரூபாய் – அதிர்ச்சியில் தந்தை!

நாக்பூர் கோரடி பகுதியில் வசித்து வருபவர் அசோக் மேன்வாட். இவருடைய 15 வயது மகன் செல்போனை பயன்படுத்தியுள்ளார். அதில் வந்த அழைப்பை அவர் எடுத்துள்ளார். எதிர்முனையில் பேசிய நபர் டிஜிட்டல் பண பரிவர்த்தனை நிறுவனத்தில் இருந்து பேசுகிறேன் என மர்ம நபர் பேசியுள்ளார்.

பின்னர் தான் சொல்லும் செயலியை செல்போனில் பதிவிறக்கம் செய்ய வேண்டும் என கூறியுள்ளார். சிறுவன் போனில் மர்மநபர் சொன்ன செயலியை பதிவிறக்கம் செய்துள்ளார். பதிவிறக்கம் செய்த 5 நிமிடத்தில் செல்போனுடன் இணைக்கப்பட்டிருந்த வங்கி கணக்கில் இருந்து சுமார் 9 லட்சம் ரூபாய் காணாமல் போனது.

பதறிப்போய் மகன் தந்தையிடம் மகன் தெரிவித்துள்ளார். உடனே காவல் நிலையத்தில் ஆன்லைன் மோசடி தொடர்பாக புகார் அளித்துள்ளார். விசாரணையில் பதிவிறக்கம் செய்யப்பட்ட செயலி, வேறொரு இடத்தில் இருந்து செல்போனை இயக்கும் ரிமோட் செயலி என்பது தெரியவந்துள்ளது.

வங்கி கணக்கு குறித்து மர்ம நபர்களிடமிருந்து அழைப்பு வந்தால், அவர்கள் சொல்வதை செய்யக்கூடாது என வங்கிகள் மற்றும் காவல்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர். மகனின் செயலால் 9 லட்சம் ரூபாயை பறிகொடுத்துள்ளார் தந்தை.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!