ஐ.நா. விசாரணைக்குழுவுக்கும் விரும்புவோர் சாட்சியமளிக்கலாம் தடுப்பது மனித உரிமை மீறல்….

vasudeva_nanayakkaraமக்­களின் சாட்­சி­ய­ம­ளிக்கும் உரி­மையை அர­சாங்­கத்தால் பறிக்க முடி­யாது. அவ்­வாறு செய்ய முனை­வது அடிப்­படை உரிமை மீற­லாகும் என தெரி­வித்த அமைச்சர் வாசு­தேவ நாண­யக்­கார, ஐ.நா. விசா­ரணைக் குழு அல்ல எந்­த­வொரு விசா­ரணைக் குழு­வுக்கும் சாட்­சி­ய­ம­ளிக்க விரும்­புவோர் சாட்­சி­ய­ம­ளிக்க முடியும் என்றும் தெரி­வித்தார்.

ஐ.நா. சர்­வ­தேச விசா­ரணைக் குழு­வுக்கு சாட்­சி­ய­ம­ளிப்போர் கைது செய்­யப்­ப­டு­வார்கள் என அரச தரப்பு வெளி­யிட்ட செய்தி தொடர்­பாக கேட்ட போதே சமூக ஒருமை
ப்­பாடு மற்றும் தேசிய மொழிகள் தொடர்­பான அமைச்சர் வாசு­தேவ நாண­யக்­கார இவ்­வாறு தெரி­வித்தார்.

இது தொடர்­பாக அமைச்சர் மேலும் தெரி­விக்­கையில்;

தாம் கண்ணால் கண்ட விட­யத்தை சாட்­சி­ய­மாக வழங்­கு­வ­தற்கு ஒவ்­வொரு மனி­த­னுக்கும் உரிமை உண்டு. அதனை அர­சாங்­கமோ அல்­லது வேறு எவ­ரா­வது தட்டிப் பறிக்க முனை­வார்­க­ளானால் அது அடிப்­படை உரிமை மீற­லாகும். இதனை ஏற்க முடி­யாது.

ஐ.நா. சர்­வ­தேச விசா­ர­ணை­யா­கட்டும் உள்ளூர் விசா­ர­ணை­யா­கட்டும் அதில் சாட்­சி­யங்­களை வழங்க தடை விதிக்­க­லா­காது. இலங்கை தொடர்பில் விசா­ரிப்­ப­தற்­காக ஐ.நா. மனித உரிமை ஆணை­யாளர் நாயகம் நவ­நீ­தம்­பிள்ளை சர்­வ­தேச குழு அமைத்­ததை நாம் ஏற்­றுக்­கொள்ள மாட்டோம். அதே­வேளை, அக்­குழு இலங்­கைக்கு வருவ­தையும் எதிர்க்­கின்றோம். ஆனால் எவ­ரா­வது ஒருவர் அக்­கு­ழு­வுக்கு சாட்­சி­ய­ம­ளிக்க விரும்­பினால் அதற்கு தடை விதிக்­கக்­கூடாது.

அது அவரவர் விருப்பத்தை பொறுத்தது. எனவே, அரசாங்கம் இவ்விடயத்தில் பிழையான அணுகு முறையை கையாள முனைவதை கைவிட வேண்டும் என்றார்.

Tags: , ,

Leave a Reply