அடுத்தவருட ஆரம்பத்தில் மைத்திரிபால ஜனாதிபதி; ஐ.தே.க.வின் அரசாங்கமே ஆட்சியிலிருக்கும்

ranil_5ஐக்­கிய தேசிய கட்­சியின் அர­சாங்­கத்­து­டனும் மைத்­திரிபால ஜனா­தி­ப­தியின் கீழ் அதி­காரம் பகி­ரப்­பட்ட ஜன­நா­யக ஆட்­சி­யு­ட­னு­மேயே அடுத்த வருடம் ஆரம்­ப­மாகும். சர்­வா­தி­கார ஆட்­சிக்கு முற்­றுப்­புள்ளி வைக்கும் நேரம் இது­வே­யாகும். இந்தச் சந்­தர்ப்­பத்தை தவ­ற­வி­டக்­கூ­டாது எனத்­தெ­ரி­வித்த ஐக்­கிய தேசிய கட்­சியின் தலைவர் ரணில் விக்­கிர­ம­சிங்க, ஆட்­சி­ய­மைக்­கப்­போ­வது ஐக்­கிய தேசியக் கட்­சியோ ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சியோ அல்ல. அனை­வ­ரையும் ஒன்­றி­ணைத்த ஐக்­கிய கூட்­ட­மைப்பே ஆகும் எனவும் குறிப்­பிட்டார்.
எதி­ர­ணியின் பொது­வேட்­பாளர் மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வுக்கு நேற்று ஐ.தே.க.வின் தலை­மை­ய­க­மான சிறி­கொத்­தாவில் வர­வேற்பு அளிக்­கப்­பட்­டது.இந்த நிகழ்வில் உரை­யாற்­றிய போதே எதிர்க்­கட்சித் தலைவர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க இவ்­வாறு தெரி­வித்தார்.

இங்கு அவர் மேலும் குறிப்­பி­டு­கையில்;

இன்று கூடி­யி­ருப்­பது வழ­மை­யை­வி­டவும் வேறு­பட்ட புதிய கூட்­ட­ணி­யாகும். ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக் ஷவினை வீழ்த்த இந்த இரா­ணுவ ஆட்­சி­யினை தகர்க்க மக்­க­ளையும் நாட்­டையும் காப்­பாற்ற உரு­வாக்­கப்­பட்­டுள்ள புதிய கூட்­ட­ணியே அடுத்த ஆண்டு ஆரம்­ப­மா­கும்­போது ஆட்­சி­யி­லி­ருக்கும்.

ஐக்­கிய தேசிய கட்­சியின் அரசாங்கமும் மைத்­தி­ரி­பால சிறி­சேன ஜனா­தி­ப­தியின் கீழ் அதி­காரம் பகி­ரப்­பட்ட ஜன­நா­யக ஆட்­சி­யுமே நாட்டில் இருக்கும்.

வழ­மை­யாக இந்த நாட்டில் ஐக்­கிய தேசிய கட்­சிக்கும் ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சிக்­குமே போட்­டி­யி­ருக்கும். ஆனால், இன்று நிலைமை அவ்­வா­று ­அல்ல. தற்­போது ராஜபக்ஷ என்ற குடும்­பத்­திற்கும் ஜன­நா­ய­கத்தை ஏற்­ப­டுத்தும் கூட்­ட­ணிக்கும் இடை­யி­லேயே போட்டி நில­வு­கின்­றது.

எனவே, இதில் ஜன­நா­யகம் வெற்றி பெற வேண்டும் என்­ப­தற்­கா­கவே ஆளும் தரப்பில் இருந்து நாட்டை நேசிக்கும் உறுப்­பி­னர்கள் எம்மை நாடு­கின்­றனர்.மைத்­தி­ரி­பால சிறி­சேன அர­சாங்­கத்தின் சிரேஷ்ட உறுப்­பினர்.

அவரே இன்று மஹிந்த ராஜபக் ஷ ஆட்­சியை வெறுத்து விட்டார். ராஜி­த­ சே­னா­ரத்ன எம்­முடன் இருக்­கிறார். இளம் உறுப்­பி­னர்கள் இருக்­கின்­றனர். இன்றும் நாளுக்கு நாள் அரசில் இருந்து உறுப்­பி­னர்கள் வெளி­யே­றிக்­கொண்­டி­ருக்­கின்­றனர். இதற்கு காரணம் மஹிந்த ராஜபக் ஷ குடும்­பத்தின் அரா­ஜக ஆட்­சி­யே­யாகும்.

யுத்தம் முடி­வ­டைந்து ஐந்து ஆண்­டு­களில் நாட்டில் ஜன­நா­யகம் அழிக்­கப்­பட்டு விட்­டது. பொரு­ளா­தாரம் சீர­ழிந்து விட்­டது. உரி­மைகள் பறிக்­கப்­பட்டு விட்­டன. ஐரோப்­பிய ஒன்­றி­யத்தினால் புலி­களின் தடை நீக்­கப்­பட்­ட­வுடன் அதற்கு எதி­ராக நாம் குரல் கொடுத்தோம். ஆனால், அரசு வாய்­களை மூடிக்­கொண்­டது.

புலி­களை ஆத­ரிப்­பது யார்? மேற்கு உலகின் விடு­த­லைப்­புலி உறுப்­பி­னர்­களை ஆத­ரிப்­பது யார் என்­பதை இப்­போது மக்கள் தெளி­வாக விளங்­கிக்­கொள்ள வேண்டும். எனவே, இப்­போது எமது எதிர்­பார்ப்பு நாட்டின் உரி­மை­க­ளையும் சுதந்­தி­ரத்­தி­னையும் வென்­றெ­டுப்­பது மட்­டு­மே­யாகும். அதற்­காக நாம் அனை­வரும் கட்சி பேத­மின்றி ஒன்­றிணைய வேண்டும். ஸ்ரீலங்கா சுதந்­திர கட்சி, ஐக்­கிய தேசிய கட்சி, ஜே.வி.பி, கூட்­ட­மைப்பு அனை­வரும் ஒன்­றி­ணைய வேண்டும். இன்று கூடி­யி­ருப்­பது ஸ்ரீலங்கா சுதந்­திரம் கட்­சியோ, ஐக்­கிய தேசிய கட்­சியோ அல்ல.

இது சக­ல­ரையும் ஒன்­றி­ணைத்த ஜன­நா­யக கூட்­டணி. இந்த கூட்­டணி ஆட்­சி­யினை அமைத்து மைத்­தி­ரி­பால சிறி­சே­னாவை ஜனா­தி­ப­தி­யாக தெரிவுசெய்ய வேண்டும். அவர் 100 நாட்­களில் நாட்டின் ஜனா­தி­பதி முறை­மை­யினை நீக்கி அதி­கார பகிர்­வினை மேற்­கொள்வார்.

அதன்பின் சகல விதத்­திலும் பொறுப்பு சொல்­லக்­கூ­டிய பாரா­ளு­மன்ற முறை­மையின் கீழ் நாம் செயற்­பட காத்­தி­ருக்­கின்றோம். எனவே 100 நாட்களே இக்கூட்டணி அதன் பின்னர் மக்கள் தமக்கான அரசை உருவாக்கி கொண்டு கட்சிகளின் சுயாதீனத்தன்மையில் தனித்து செயற்பட முடியும். எனவே மக்கள் இப்போது சரியான முடிவினை எடுக்க வேண்டும். இந்த சந்தர்ப்பம் மிகவும் பெறுமதியானது. நாட்டின் போக்கினை மாற்றியமைக்க இதுவே சரியான தருணம். இதை எவரும் தவறவிட வேண்டாம் எனவும் குறிப்பிட்டார்.

Tags: , ,

Leave a Reply